Streamline your tax compliance with our expert-assisted GSTR 9 & 9C services @ ₹14,999/-

Tax efficiency, interest avoidance, and financial control with advance payment @ 4999/-
Others

சென்னையில் ஜாமீன் பெறுவதற்கான விண்ணப்பம்

நீதிமன்றத்திற்கு நிபந்தனை அல்லது நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கும் அதிகாரம் உள்ளது. ஜாமீன் பெறுவதற்கான முறைகள் பற்றி அறிய மேலும் வாசியுங்கள்

ஒரு நபர் காவலில் வைக்கப்பட்டிருக்கும் போது அவன் அல்லது அவளை சிறையில் இருந்து விடுவித்து வெளியில் எடுக்க நீதிமன்றத்திற்கு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும்।மேலும் அப்படி வெளியில் எடுக்கும் போது குற்றம் சாட்ட பட்டவரை நீதிமன்றம் எப்போது அழைத்தாலும் அவன் அல்லது அவள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வேண்டும். ஜாமீன் பெறுவதற்கான முறைகள் பற்றி இக்கட்டூரையில் காணலாம். 

நீதிமன்றத்திற்கு நிபந்தனை அல்லது நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கும் அதிகாரம் உள்ளது. மேலும் நீதிமன்றத்திற்கு கொடுக்கப்பட்ட ஜாமீனை மறுக்கும் அதிகாரம் உள்ளது. பாதுகாப்பிற்காக செலுத்தப்படும் பணத்தை தான் ஜாமீன் என்று அழைக்கபடுகிறது. இன்னும் துல்லியமாக கூறினால் ஜாமீன் பத்திரம் மற்றும் கைதி மீது அதிகார வரம்பை  நீதிமன்றங்களே முழுமையாக கையாளுகிறது. பாதுகாப்பு என்பது பணமாக இருக்கலாம், சொத்துக்கு தலைப்பு கொடுக்கும் ஆவணங்கள், அல்லது தனிப்பட்ட நபர்களின் பத்திரங்கள் அல்லது ஒரு தொழில்முறை பத்திரதாரர் அல்லது பிணைப்பு நிறுவனத்தின் பத்திரமாக இருக்கலாம். ஜாமீன் கேட்டும் அது கிடைக்காத நிலையில் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் தன்னை சரணடையச் செய்வது அவசியமாகும்.

Below you’ll find the list of essential and start-up friendly services like how to apply for a food license, time taken for trademark registration and procedure for Udyog Aadhaar registration.

 

ஜாமீன் வழங்கல்

கிரிமினல் வழக்கில் கைது செய்ய பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கவோ அல்லது மறுக்கவோ நீதிமன்றங்களுக்கு முழு அதிகாரமும் உள்ளது. சுமத்த பட்ட குற்றம் பிணையில் விட முடியாத குற்றமாக இருந்தால் விசாரணை வழங்கப்படும் நீதி மன்றத்திடம் அணுகி பெயில் வாங்குவதற்கான உரிமை குற்றம் சாட்டப்பட்டவர்க்கு உண்டு. அதற்கு அவர் 48 மணி நேரம் காத்திருக்க வேண்டும். வழக்கின் உண்மைகளைப் பொறுத்து, குற்றம் சாட்ட பட்டவருக்கு ஜாமீன் அளிக்க முடியுமா இல்லையா என்பதை நீதிபதி தீர்மானிப்பார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படும் போது ஜாமீன் மறுக்கப்படுகிறது.  குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 437 ன் கீழ் சில நிபந்தனைக்கு உள்ளன அதில் நீங்கள் ஜாமீன் பெறாத குற்றத்தைச் செய்திருந்தாலும் ஜாமீன் கேட்கலாம். ஜாமீன் பெறாத வழக்குகளில், ஜாமீன் பெறுவது என்பது நம் உரிமை அல்ல, அது நீதிபதியின் விருப்பப்படி உள்ளது. ஜாமீன் வழங்குவதற்கு இந்த வழக்கு பொருத்தமானது என்று நீதிபதி கருதினால், சூழ்நிலைக்கேட்ப  தேவையான சில நிபந்தனைகள் விதிக்கப்படலாம். 

ஜாமீன் பெறுவதற்கான முறைகள்

  1. ஒரு நபர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டால், அவர் மீது வழக்கு பதிவு செய்ய காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்.
  2. குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர், குடியிருப்பு முகவரி மற்றும் பிறந்த இடம் பற்றிய தகவல்களையும் மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் போன்ற விவரங்களை காவல்துறை பதிவு செய்யும்.
  3. காவல்துறை அதிகாரி குற்றம் சாட்டப்பட்டவரின் கிரிமினல் பின்புறத்தை ஆராந்து சரிபார்ப்பார், மேலும் விரல் அச்சிட்டு(FINGER PRINT) ,போன்ற தகவல்களை சேகரித்து குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்வார். குற்றம் சாட்டப்பட்டவர் செய்த குற்றம் சிறிய குற்றமாக இருந்தால் அவர்  உடனடியாக ஜாமீனுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். குற்றம் சிக்கலானது என்றால், குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் தனது உரிமையை கோர 48 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
  4. ஜாமீன் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்  பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஜாமீன் பெறலாமா அல்லது இல்லையா என்பதை நீதிபதி தீர்மானிக்கலாம். குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டிய தொகை நீதிபதியே இறுதியில் முடிவு செய்வார். சில சிறிய குற்ற வழக்குகளுக்கு, ஜாமீன் வழங்குவதற்காக  தொகை ஒரு நிலையான டெபாசிட் தொகையாக இருக்கும்.
  5. வழக்கு சிக்கலானதாக இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவரின் பின்னணி, குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றப் பதிவு அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாமா என்பதன் அடிப்படையில் ஜாமீன் தொகையை நீதிபதி தீர்மானிக்கலாம். வழக்கமாக, சில நிபந்தனைகளின் பேரில் ஜாமீன் வழங்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் அந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினால், ஜாமீன் உடனடியாக ரத்து செய்யப்படும். குற்றம் சாற்றப்பட்டவரால்  வழக்கை வெல்ல முடிந்தால், நீதிமன்றம் ஜாமீன் தொகையை  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு திருப்பித் கொடுத்துவிடும்.

Subscribe to our newsletter blogs

Back to top button

Adblocker

Remove Adblocker Extension